முதிர்வு வயது
- Question
- முதிர்வு வயது
- Answer
-
- 7x இறப்பு பலன்: 18 - 65 வயது
- 10x இறப்பு பலன்: 18 - 60 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
5/ 7 ஆண்டுகள்
12 ஆண்டுகள்; 15 ஆண்டுகள்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இது ஒரு நான்-லிங்க்ட், நான்-பார்டிசிபேட்டிங், தனிநபர், லிமிடெட் பிரீமியம், சேவிங்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இதில் 5/7 வருடங்கள் என்ற குறுகிய காலத்துக்கு பிரீமியம் செலுத்தினால் போதும், 12 அல்லது 15 ஆண்டுகள் என்ற நீண்ட காலத்திற்கு உங்களை பாதுகாக்கும். அதே நேரத்தில் ஒரே பாலிசியில் உங்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், இந்த பாலிசி உங்களுக்கு வருடாந்திர உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகள், 1 வது ஆண்டில் விபத்து இறப்பு பலன், மருத்துவ பரிசோதனைகள் எதுவுமில்லாமல் மற்றும் விரைவான செயல்முறைகளுடன் இறுதி சடங்கு கவரேஜ் ஆகியவற்றை வழங்குகிறது
பாலிசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கீழே ஒரு உதாரணத்துடன் விளக்கியுள்ளோம்.
25 வயதான திரு. கோன்சால்வேஸ், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் சரல் பச்சத்பீமா திட்டத்தை 15 வருட பாலிசி காலத்திற்கு வாங்கியுள்ளார். முதிர்வின் போது ரூ.1,69,200 காப்பீட்டுத் தொகைக்கு 7 ஆண்டுகளுக்கு 24,000 வருடாந்திர பிரீமியம் செலுத்தினார்.
பாலிசி காலத்தின் முடிவில், அவர் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகள் உட்பட ரூ .2,80,080 பெறுவார்.
பாலிசி காலத்தின் போது அவர் இறக்க நேர்ந்தாலும், பாலிசியின் 10வது ஆண்டில், அவரது அன்புக்குரியவர்களுக்கு ரூ. 2,95,440 இறப்பு பலன் வழங்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள். அவரது நாமினி(கள்) இறப்பு பலனை மொத்தத் தொகையாகவோ அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் 5 வருட காலத்திற்கு பணத்தை பெறலாம்
பிரீமியம் செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் மற்றும் பாலிசி காலம் 12 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகளுக்கான முதிர்வுத் தொகை விவரங்கள்:
வயது | வருடாந்திர பிரீமியம் | பாலிசி காலம் 12 ஆண்டுகள் | பாலிசி காலம் 15 ஆண்டுகள் |
---|---|---|---|
முதிர்வின் போது காப்பீட்டுத் தொகை | முதிர்வின் போது காப்பீட்டுத் தொகை | ||
25 வயது | 25,000 | 1,72,500 | 1,76,250 |
35 வயது | 25,000 | 1,70,000 | 1,73,750 |
45 வயது | 25,000 | 1,62,500 | 1,66,250 |
தகுதி வரம்பு | விவரங்கள் | ||
---|---|---|---|
குறைந்தபட்ச நுழைவு வயது | 6 வயது | 12 ஆண்டு பாலிசி காலத்துக்கு | 10x இறப்பு பலன் |
3 வயது | 15 ஆண்டு பாலிசி காலத்துக்கு | 10x இறப்பு பலன் | |
46 வயது | 12 ஆண்டு பாலிசி காலத்துக்கு | 7x இறப்பு பலன் | |
46 வயது | 15 ஆண்டு பாலிசி காலத்துக்கு | 7x இறப்பு பலன் | |
அதிகபட்ச நுழைவு வயது | 10x இறப்பு பலன் | 45 வயது | |
7x இறப்பு பலன் | 50 வயது | ||
முதிர்வின் போது குறைந்தபட்ச வயது | 18 வயது | ||
முதிர்வின் போது அதிகபட்ச வயது | 10x இறப்பு பலன் | 60 வயது | |
7x இறப்பு பலன் | 65 வயது | ||
பிரீமியம் செலுத்தும் காலம் | 5 / 7 வயது | ||
பாலிசி காலம் | 12 வயது, 15 வயது | ||
முதிர்வின் போது காப்பீட்டுத் தொகை | குறைந்தபட்சம் | அதிகபட்சம் | |
ரூ. 84,000 | ரூ. 5,00,000 | ||
பிரீமியம் (ரூ.) | குறைந்தபட்சம் | அதிகபட்சம் | |
ரூ. 12,000 | ரூ. 50,000 | ||
ரூ. 6,000 | |||
ரூ. 3,000 | |||
ரூ. 1,000 | |||
பிரீமியம் செலுத்தும் முறைகள் மற்றும் மாதிரி காரணிகள் | பிரீமியம் கால இடைவெளி | வருடாந்திர பிரீமியத்திற்கு பயன்படுத்த வேண்டிய காரணி | |
வருடாந்திரம் | 1.0000 | ||
அரையாண்டு | 0.5119 | ||
காலாண்டு | 0.2590 | ||
மாதாந்திரம் | 0.0870 |
குறிப்பு:
a. மைனர் ஆயுளுக்கு, பாலிசி வழங்கப்பட்டவுடன் உடனடியாக ஆபத்து காப்பீடு தொடங்கும். ஆயுள் காப்பீட்டுதாரருக்கு பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்:
b. கடந்த பிறந்த நாளின்படி வயது குறிப்பிடப்பட்டுள்ளது
c வருடாந்திர பிரீமியம் என்பது பொருந்தக்கூடிய வரிகள், ரைடர் பிரீமியங்கள், எழுத்துறுதிபடி கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாதிரி பிரீமியங்களுக்கான லோடிங்ஸ் ஏதேனும் இருந்தால் அவை தவிர்த்து ,பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரீமியமாகும்,
d. செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் என்பது கூடுதல் பிரீமியம், ரைடர் பிரீமியம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் தவிர்த்து பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் கூட்டுத்தொகையாகும்.
நீங்கள் உயிரோடிருந்து பாலிசி செயல்பாட்டிலும் முழுவதும் செலுத்தப்பட்டிருந்தால், முதிர்வின் போது உத்தரவாத காப்பீட்டுத் தொகை (SAM) மற்றும், சேர்ந்துள்ள உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகளை முதிர்வு பலனாகப் பாலிசி காலத்தில் முடிவில் பெறுவீர்கள்.
முதிர்வு பலனை வழங்கியதும், பாலிசி நிறுத்தப்படும், மேலும் பலன்கள் எதுவும் வழங்கப்படாது.
முதிர்வின் போது உத்தரவாத காப்பீட்டுத் தொகை (SAM) என்பது பாலிசி முதிர்வின்போது செலுத்த வேண்டிய உறுதியளிக்கப்பட்ட தொகையாகும்
செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் X% தொகையை உங்கள் பாலிசி உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகையாக வழங்குகிறது, இதில் X என்பது கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளபடி பாலிசி காலம் மற்றும் வருடாந்திர பிரீமியத்தைப் பொறுத்து மாறுபடும்:-
12 வருட பாலிசி காலத்திற்கு
வருடாந்திர பிரீமியம் (ரூ.) | உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகள் |
---|---|
25,000 க்கும் குறைவாக | 4.75% |
25,000 முதல் 34,999 வரை | 5.00% |
35,000 மற்றும் அதற்கு மேல் | 5.25% |
15 வருட பாலிசி காலத்திற்கு
வருடாந்திர பிரீமியம் (ரூ.) | உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகள் |
---|---|
25,000 க்கும் குறைவாக | 5.50% |
25,000 முதல் 34,999 வரை | 5.75% |
35,000 மற்றும் அதற்கு மேல் | 6.00% |
அத்தகைய உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகை சேரக்கூடிய நேரத்தில் பாலிசி செயல்பாட்டில் இருந்தால், ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகை சேரத்தொடங்கும்.
வருடாந்திர பிரீமியம் என்பது பொருந்தக்கூடிய வரிகள், ரைடர் பிரீமியங்கள், எழுத்துறுதிபடி கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாதிரி பிரீமியங்களுக்கான லோடிங்ஸ் ஏதேனும் இருந்தால் அவை தவிர்த்து ,உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரீமியமாகும், செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் என்பது கூடுதல் பிரீமியம், ரைடர் பிரீமியம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் தவிர்த்து பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் கூட்டுத்தொகையாகும்
ஆயுள் காப்பீட்டுதாரர் இறக்க நேரிடும் பட்சத்தில், பாலிசி செயல்பாட்டில் இருந்தால் அல்லது முழுமையாக செலுத்தப்பட்டிருந்தால் பின்வரும் இறப்பு பலன்கள் நாமினி(களுக்கு) வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட இறப்பு பலன் வழங்கப்பட்டு அதன் பின் பாலிசி நிறுத்தப்படுகிறது.
இவற்றில் அதிகமானது எதுவோ அத்தொகையை நாமினி(கள்) பெறுவார்.
a. இறப்பின்போது காப்பீட்டுத் தொகை (SAD) மற்றும் சேர்ந்திருக்கும் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகள் (இறப்பு தேதி வரை ஏதேனும் இருந்தால்)
b. இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் 105%.
இறப்பின் போது காப்பீட்டுத் தொகை (SAD) என்பது வருடாந்திர பிரீமியத்தின் X மடங்கு அல்லது இறப்பின் போது செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட சரியான தொகை (அடிப்படை காப்பீட்டுத் தொகை) ஆகிய இவ்விரண்டில் அதிகமான தொகை எதுவோ அத்தொகை. X என்பது 3 முதல் 45 வயது வரைக்கும் 10 மற்றும் 46 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 7 ஆகும்.
பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி வெய்வர் ஆஃப் பிரீமியம் (WOP) ரைடரை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ரைடர் பிரவுஸரைப் பார்க்கவும்.
பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டாளரின் எதிர்பாராத இறப்பு ஏற்பட்டால், இறப்பு பலனானது நாமினி(களுக்கு) மொத்த தொகையாகவோ அல்லது அடுத்த 5 ஆண்டுக்கு மாதாந்திர வருமானமாகவோ வழங்கப்படுகிறது.
பாலிசி காலத்தின் போது/ஆயுள் காப்பீட்டாளரின் இறப்பின் போது எந்த நேரத்திலும் பாலிசிதாரர்/ நாமினி தேர்ந்தெடுத்தபடி, மேலே குறிப்பிட்டுள்ள இறப்பு பலன் மொத்தத் தொகையாகவோ அல்லது 5 ஆண்டு காலப்பகுதியில் மாதாந்திர தவணைகளாகவோ வழங்கப்படும். ஒருவேளை தவணை விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இறப்பு பலனை ஆன்னுயுட்டி காரணியால் வகுப்பதன் மூலம் தவணைத் தொகை கணக்கிடப்படுகிறது, இறப்பின்போது நடைமுறையில் இருக்கும் எஸ்பிஐ சேமிப்பு வங்கி வட்டி விகிதம் ஆன்னுயுட்டி காரணியைக் கணக்கிட பயன்படுத்தப்படும். மற்றும் தவணை செலுத்தல் தொடங்கியவுடன், அது தவணை காலம் முழுவதும் நிலையாக இருக்கும். தற்போதுள்ள எஸ்பிஐ சேமிப்பு வங்கி வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் மதிப்பாய்வுக்கு உட்பட்டது.
மேலே உள்ளவற்றுக்கு மேலதிகமாக, முதல் பாலிசி ஆண்டில் விபத்து காரணமாக இறப்பு ஏற்பட்டால் இறப்பின் போது காப்பீட்டுத் தொகைக்கு (SAD) சமமான தொகை வழங்கப்படும்.
ஒருவேளை பாலிசியை பிஓஎஸ் (POS) சேனல் மூலம் வாங்கியிருந்தால், முதல் 90 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகே ஆபத்துக் காப்பீடு தொடங்கும்.
பிஓஎஸ் (POS) சேனல் மூலம் வாங்கப்பட்ட பாலிசிக்கான இறப்பு பலன்கள்:
இறப்பு நிகழ்ந்தால் (விபத்து தவிர்த்து):
i) காத்திருப்பு காலத்தின் போது- செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 100%
ii) காத்திருப்பு காலம் முடிந்தப் பிறகு- இறப்பின் போது காப்பீட்டுத் தொகை
விபத்து காரணமாக இறப்பு ஏற்பட்டால் அல்லது பாலிசி புதுப்பித்தல் சமயங்களில் காத்திருப்பு காலம் பொருந்தாது.
இறுதிச் சடங்கு கவரேஜ் : ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பின் போது காப்பீட்டுத் தொகையில் 10% அல்லது ₹25,000 (எது குறைவோ அத்தொகை) இறப்பு குறித்த அறிவிப்பு பெறப்பட்டவுடனேயே உடனடியாக வழங்கப்படும். இது கூடுதல் பலன் அல்ல. ஆகவே, இந்த இறுதிச்சடங்கு தொகை செலுத்த வேண்டிய இறப்பு பலனிலிருந்து கழிக்கப்படும்.
நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறக்கூடிய பலன்கள் மீது வரிச் சலுகைகள் கிடைக்கலாம். அரசாங்க வரிச் சட்டங்களின்படி இவை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. இந்த பாலிசியை வாங்குவதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரை கலந்தாலோசியுங்கள்.
ஆம், இந்த பாலிசியின் கீழ் நீங்கள் கடன் பெற்று பயனடையலாம்.
எந்த நேரத்திலும் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை சரண்டர் மதிப்பைப் பொறுத்ததாகும். இருக்கின்ற சரண்டர் மதிப்பில் 70% வரை கடன் தொகையை நீங்கள் பெறலாம். குறைந்தபட்ச கடன் தொகை ரூ.1,000 ஆக இருக்க வேண்டும். நிதியாண்டு 2021-22-க்கு தற்போதைய கடனுக்கு 9% என்ற விகிதத்தில் (எளிய வட்டி) வட்டி வசூலிப்போம், இந்த வட்டி விகிதம் அவ்வப்போது மாறுபடும். கடனுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அடிப்படை கடந்த நிதியாண்டின் இறுதியின்படி 10 ஆண்டு ஜி-செக் விகிதம் மற்றும் அடுத்த 50 அடிப்படை புள்ளிகளுக்கு முழுமையாக்கப்படுகின்ற 250 அடிப்படை புள்ளிகளின் மார்ஜின் ஆகும். இவ்வாறு பெறப்படும் வட்டி விகிதம் அடுத்த நிதியாண்டில் பொருந்தும். கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் அடிப்படையில் எந்தவொரு மாற்றமும் IRDAI முன் அனுமதிக்குப் பின்னரே செய்ய முடியும்.
கடன் பெறும்போது, இந்த பாலிசி எங்கள் பெயரில் ஒதுக்கப்படும். நீங்கள் முழு கடன் தொகையையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருந்தால், இந்த பாலிசியை நாங்கள் உங்களுக்கு மீண்டும் ஒதுக்குவோம். நாமினிகள்) / நியமனதாரர் / சட்டப்பூர்வ வாரிசு(கள்) ஆகியோருக்கு இறப்பு பலன் அல்லது ஆயுள் காப்பீட்டுதாரருக்கு முதிர்வு பலனை வழங்குவதற்கு முன்பு நிலுவையிலுள்ள கடன் தொகையையும் வட்டியையும் நாங்கள் வசூலிப்போம். நிலுவையில் உள்ள கடனும் வட்டியும் பணம் செலுத்தப்பட்ட பாலிசிகளின் சரண்டர் மதிப்பை தாண்டும் போது, பாலிசி கட்டாயமாக எங்களால் சரண்டர் செய்யப்படும் மற்றும் சரண்டர் தொகை அல்லது செலுத்தப்பட்ட மதிப்பிலிருந்து வட்டியுடன் சேர்த்து நிலுவையில் உள்ள கடன் தொகை பெறப்படும். செயல்பாட்டில் உள்ள பாலிசிகளுக்கு கட்டாய சரண்டர் பொருந்தாது. செயல்பாட்டில் உள்ள பாலிசிகளுக்கு, நிலுவையில் உள்ள கடனும் வட்டியும் சரண்டர் மதிப்பில் 90% ஐத் தாண்டினால், கடனை பகுதியளவு அல்லது முழுமையாக திருப்பிச் செலுத்த நிறுவனம் பாலிசிதாரருக்கு ஒரு அறிவிப்பை அனுப்பும். அறிவிப்பைப் பெற்ற பிறகு கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், எந்தவொரு பலன்களையும் செலுத்துவதற்கு முன்பு நிலுவையில் உள்ள கடனை வட்டியுடன் சேர்த்து கழிப்போம். நிலுவையில் உள்ள கடனை வட்டியுடன் பெற்றப் பிறகு, மீதமுள்ள பலன் ஏதேனும் இருந்தால் அத்தொகை வழங்கப்படும்.
நாங்கள் உங்களுக்கு ஒரு கருணைக் காலத்தை வழங்குகிறோம், இது பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து பிரீமியம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம், இந்த காலத்தில் பாலிசி இடர் காப்பீட்டுடன் செயல்பாட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது
மாதாந்திர அடிப்படையில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் 15 நாட்களும் மற்றும் பிற முறையில் பிரீமியம் செலுத்தும் அனைத்து காப்பீடுகளுக்கும் பணம் செலுத்துகிறீர்கள் எனில் 30 நாட்களுக்குக் குறையாமலும் கருணைக் காலத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கருணைக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலன் விருப்பத்தின்படி ஆயுள் காப்பீட்டாளரின் இறப்பு அல்லது ஏதேனும் காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வு ஏற்பட்டால், இறப்பு தேதி அல்லது காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வின் தேதி வரை செலுத்தப்படாத பிரீமியங்களைக் கழித்த பிறகு மீதமுள்ள பலன்களை நாங்கள் வழங்குவோம். இந்தக் காலகட்டத்தில் பாலிசி செயல்பாட்டில் இருப்பதாகக் கருதப்படும்
வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு இடைவெளிகளில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குக் குறையாமலும் மற்றும் மாதாந்திர அடிப்படையில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் 15 நாட்களும் கருணைக் காலத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கருணைக் காலத்தில் ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு ஏற்பட்டால், இறப்பு தேதி தேதி வரை செலுத்தப்படாத பிரீமியங்களைக் கழித்த பிறகு மீதமுள்ள பலன்களை நாமினி(கள்)/ நியமனதாரர்(கள்) / சட்டப்பூர்வ வாரிசு(களுக்கு) நாங்கள் வழங்குவோம்.
பிரீமியம் செலுத்த வேண்டிய தேதிக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பு, பிரீமியம் தவணைத் தேதிக்கு 12 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் பிரீமியம் செலுத்தினால், புதுப்பித்தல் பிரீமியம் தொகையில் தள்ளுபடி வழங்குவோம், ஆனால் இந்த காலம் பிரீமியம் செலுத்த வேண்டிய அதே நிதியாண்டிற்குள் இருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையை முந்தைய நிதியாண்டில் அதிகபட்சமாக பிரீமியம் செலுத்த வேண்டிய தவணை தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே வசூலித்தால் தள்ளுபடி பெற தகுதி பெறலாம். பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் பிரீமியம் செலுத்தப்பட்டால் தள்ளுபடி வழங்கப்படாது.
ஆம், பின்வரும் ரைடர்ஸை தேர்ந்தெடுக்கலாம்
A.இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் வெய்வர் ஆஃப் பிரீமியம் (WOP) ரைடர் (UIN : 143B017V01)
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடர்
பாலிசிதாரர்/ ஆயுள் காப்பீட்டாளர் இறப்பு, விபத்தினால் மொத்த நிரந்தர இயலாமை அல்லது ரைடரில் வரையறுக்கப்பட்டுள்ள அபாயகரமான நோய்களால் பாதிக்கப்பட்டால், உங்கள் அடிப்படை பாலிசியின் எதிர்கால பிரீமியங்களை தள்ளுபடி செய்வதன் மூலம் இந்த ரைடர் உங்களை ஆதரிக்கிறது. பாலிசிதாரர்/ ஆயுள் காப்பீட்டுதாரருக்கான விருப்பத்தேர்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
விருப்பம் | பலன் |
---|---|
இறப்பின்போது பிரீமியம் தள்ளுபடி | ரைடர் மற்றும் அடிப்படை பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சத்தில், பாலிசிதாரரின் இறப்பின்போது (அடிப்படை பாலிசியின் கீழ் ஆயுள் காப்பீடுதார்ர் மற்றும் பாலிசிதாரர் வெவ்வேறு நபர்களாக இருக்கும்போது மட்டுமே) அடிப்படை பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் தள்ளுபடி செய்வதற்கான பலனை இந்த விருப்பம் வழங்குகிறது. |
விபத்தினால் மொத்த நிரந்தர இயலாமை அல்லது (அபாயகரமான நோய் கண்டறிதல்) ஆகியவற்றின்போது பிரீமியம் தள்ளுபடி | பின்வரும் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழும்போது அடிப்படை பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் தள்ளுபடி செய்வதற்கான பலனை இந்த விருப்பம் வழங்குகிறது – ரைடர் மற்றும் அடிப்படை பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சத்தில், .ரைடர் ஆயுள் காப்பீட்டுதாரரின் விபத்து மொத்த நிரந்தர இயலாமை அல்லது ரைடரின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு அபாயகரமான நோயால் ரைடர் ஆயுள் காப்பீட்டுதாரர் பாதிக்கப்பட்டால் |
இறப்பு அல்லது விபத்தினால் மொத்த நிரந்தர அல்லது அபாயகரமான நோய் ஆகியவற்றின்போது பிரீமியம் தள்ளுபடி | பின்வரும் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று நிகழும்போது அடிப்படை பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் தள்ளுபடி செய்வதற்கான பலனை இந்த விருப்பம் வழங்குகிறது – ரைடர் மற்றும் அடிப்படை பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சத்தில், ரைடர் ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு அல்லது ரைடர் ஆயுள் காப்பீட்டுதாரரின் எதிர்பாராத மொத்த நிரந்தர இயலாமை அல்லது ரைடரின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு அபாயகரமான நோயால் ரைடர் ஆயுள் காப்பீட்டுதாரர் பாதிக்கப்பட்டால். |
கருணை காலத்திற்குள் பிரீமியங்கள் செலுத்தப்படாவிட்டால், மற்றும் பாலிசி உத்தரவாதமளிக்கப்பட்ட சரண்டர் மதிப்பைப் பெறவில்லை என்றால், அது காலாவதியாகிவிடும். பாலிசி காலாவதியாகிவிட்டால், ஆபத்து காப்பீடு நிறுத்தப்படும், மேலும் எந்த பலன்களும் செலுத்தப்படாது.
இரண்டு முழு ஆண்டுகளுக்கும் குறைவான பிரீமியம் செலுத்தப்பட்டிருந்தால், பாலிசி காலாவதியாகிவிடும். இருப்பினும், புதுப்பித்தல் காலத்துக்குள் பாலிசியை புதுப்பிக்கலாம். அவ்வாறு புதுப்பிக்கப்படாவிட்டால், அது புதுப்பித்தல் காலத்திற்குப் பிறகு எந்த பலன்களும் வழங்கப்படாமல் முன்கூட்டியே நிறுத்தப்படும். மேலும் தகவலுக்கு புதுப்பித்தல் தொடர்பான பிரிவு 13 ஐ கீழேப் பார்க்கலாம்.
குறைந்தது அடுத்தடுத்த இரண்டு முழு ஆண்டுகளின் பிரீமியங்கள் செலுத்தப்பட்டு அடுத்தடுத்த பிரீமியங்கள் செலுத்தப்படவில்லை என்றால், முதல் செலுத்தப்படாத பிரீமியம் தவணைத் தேதியிலிருந்து கருணைக் காலம் முடிவடைந்தப் பிறகு பாலிசி செலுத்தப்பட்ட மதிப்பைப் பெறுகிறது.
குறிப்பு:
பாலிசி செலுத்தப்பட்ட பாலிசியாக மாறியப்பிறகு:
இறப்பு அல்லது முதிர்வின் போது செலுத்தப்படும் பலன்கள் பாலிசியின் கீழ் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களைவிட குறைவாக இருக்கக்கூடாது.
கீழ்கண்டபடி முதலாவது செலுத்தப்படாத வழக்கமான பிரீமியத்தின் தவணை தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆனால் பாலிசி காலம் முடிவதற்குள் உங்கள் பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம்:
எங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு இணங்க அதன் அனைத்து பலன்களுடன் சேர்த்து மட்டுமே ஒரு காலாவதியான பாலிசி புதுப்பிக்கப்படும். பாலிசி புதுப்பிக்கப்பட்டால், ஒரு செயல்பாட்டில் உள்ள பாலிசிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி அனைத்து பலன்களும் மீட்டெடுக்கப்படும். காலாவதியான பாலிசியை புதுப்பிக்கும் போது, பாலிசி காலாவதியான நிலையில் இருந்த காலத்திற்கு உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகளுக்கு பாலிசி தகுதி பெறும். பாலிசி எதிர்கால உத்தரவாத சேர்த்தல்களுக்கும் தகுதி பெறும்.
குறிப்பு: நிதியாண்டு 2021-22 க்கான பிரீமியம் செலுத்துவதில் தாமதத்திற்காக வசூலிக்கப்படும் தற்போதைய வட்டி ஆண்டுக்கு 9.50%.எளிய வட்டியாகும், புதுப்பித்தலுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அடிப்படை கடந்த நிதியாண்டின் இறுதியின்படி 10 ஆண்டு ஜி-செக் விகிதம் மற்றும் அடுத்த 50 அடிப்படை புள்ளிகளுக்கு முழுமையாக்கப்படுகின்ற 300 அடிப்படை புள்ளிகளின் மார்ஜின் ஆகும். இவ்வாறு பெறப்படும் வட்டி விகிதம் அடுத்த நிதியாண்டில் பொருந்தும். புதுப்பித்தலுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் அடிப்படையில் எந்தவொரு மாற்றமும் IRDAI முன் அனுமதிக்குப் பின்னரே செய்ய முடியும்.
உங்கள் பாலிசியின் முழு பலன்களையும் அனுபவிக்க உங்கள் பாலிசியைத் தொடர்வது நல்லது. இருப்பினும், சில சூழ்நிலைகளில் நீங்கள் உங்கள் பாலிசியை சரண்டர் செய்ய விரும்பலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். முதல் இரண்டு முழு பாலிசி ஆண்டுகளுக்கு உங்கள் பிரீமியங்களை செலுத்தியிருந்தால், சரண்டர் மதிப்பு பெறப்படுகிறது.
பாலிசி சரண்டர் மதிப்பைப் பெற்ற பிறகு எந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வ கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம், பாலிசி காலத்திற்குள் நீங்கள் இந்தப் பாலிசியை சரண்டர் செய்யலாம். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பாலிசி சரண்டர் செய்யப்பட்டவுடன் அதை உங்களால் புதுப்பிக்க முடியாது.
சரண்டர் செய்யும்போது செலுத்த வேண்டிய தொகையானது உத்தரவாதமளிக்கப்பட்ட சண்டர் மதிப்பு (GSV) மற்றும் சிறப்பு சரண்டர் மதிப்பு (SSV) ஆகிய இவ்விரண்டில் எது அதிகமோ அத்தொகையாகும்.
உத்தரவாதமளிக்கப்பட்ட சரண்டர் மதிப்பு என்பது (GSV)
GSV காரணிகள் சரண்டர் செய்யப்படும் பாலிசி ஆண்டு மற்றும் பாலிசி காலத்தைப் பொறுத்தது, மேலும் பின்வருமாறு கணக்கிடப்படும்
பிரீமியத்திற்கான GSV காரணி * செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் + உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகளுக்கான GSV காரணி * சேர்ந்திருக்கும் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகள்
சிறப்பு சரண்டர் மதிப்பு (SSV)
முழுவதும் செலுத்தப்பட்ட பாலிசிக்கு அதாவது அனைத்து செலுத்த வேண்டிய பிரீமியங்களையும் செலுத்தும்போது அல்லது செலுத்தியப் பிறகு:
SSV பின்வருமாறு கணக்கிடப்படும்:
(முதிர்வின் போது உத்தரவாத காப்பீட்டுத் தொகை) –ஐ சரண்டரின் போது நடைமுறையில் இருந்த SSV காரணியால் பெருக்க வேண்டும் + சேர்ந்திருக்கும் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகளை குறைக்கப்பட்ட செலுத்தப்பட்ட பாலிசிக்கான சரண்டரின் போது நடைமுறையில் இருந்த SSV காரணியால் பெருக்க வேண்டும்
SSV பின்வருமாறு கணக்கிடப்படும்:
முதிர்வின் போது செலுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை சரண்டரின் போது நடைமுறையில் இருந்த SSV காரணியால் பெருக்க வேண்டும் + சேர்ந்திருக்கும் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகைகளை சரண்டரின் போது நடைமுறையில் இருந்த SSV காரணியால் பெருக்க வேண்டும்
IRDAI இன் முன் ஒப்புதலுக்கு உட்பட்டு, முதலீட்டு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு SSV காரணி நிறுவனத்தால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும்.
உத்தரவாதமளிக்கப்பட்ட சரண்டர் மதிப்பு காரணிகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து இணைப்பு I ஐப் பார்க்கவும் அல்லது எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும், www.indiafirstlife.com அல்லது உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.
கருணைக் காலம் முடிவதற்குள் பிரீமியம் செலுத்தவில்லை மற்றும் வழங்கப்பட்ட பாலிசி எந்தவொரு சரண்டர் மதிப்பையும் பெறவில்லை என்றால்; பாலிசி காலாவதியாகிவிடும். அனைத்து பலன்களும் நிறுத்தப்படும், மேலும் பாலிசியின் கீழ் எந்தவொரு பலனும் வழங்கப்படாது
பாலிசியின் கீழ் ஆபத்து தொடங்கிய நாளிலிருந்து அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் தற்கொலை காரணமாக இறப்பு ஏற்பட்டால், பாலிசி செயல்பாட்டில் இருந்தால், பாலிசிதாரரின் நாமினி அல்லது பயனாளி இறந்த தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் 80% அல்லது இறப்பு தேதியின்படி கிடைக்கக்கூடிய சரண்டர் மதிப்பு ஆக இதில் எது அதிகமோ அத்தொகையைப் பெற தகுதி பெறுகிறார்.
மோசடி, தவறான அறிக்கை ஆகியவற்றிற்கு அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 இன்படி தீர்க்கப்படும்
அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 சொல்கிறது
1) பாலிசி தேதியிலிருந்து, அதாவது, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்கு உட்படுத்தப்படாது
2) மோசடி காரணத்துக்காக பாலிசி தேதியிலிருந்து, அதாவது, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய முடிவுக்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
3) துணைப்பிரிவு (2) இல் என்ன குறிப்பிட்டிருந்தாலும் சரி, பாலிசிதாரர் ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது தனது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் தான் உண்மை என நம்பியதாக நிரூபிக்க முடிந்தால் அல்லது உண்மையை மறைப்பதற்கான வேண்டுமென்றே எந்த நோக்கமும் இல்லை என நிரூபிக்க முடிந்தால் அல்லது ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது காப்பீட்டாளருக்கு தெரிந்திருந்தால், எந்தவொரு காப்பீட்டாளரும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் பாலிசியை மோசடி காரணமாக நிராகரிக்க மாட்டார்,: மோசடி ஏற்பட்டால், பாலிசிதாரர் உயிருடன் இல்லை என்றால், அதை நிரூபிக்கும் பொறுப்பு பயனாளிகளுக்கு உள்ளது.
4) காப்பீடு செய்யப்பட்டவரின் ஆயுட்காலம் தொடர்பாக ஏதேனும் தவறான அறிக்கையோ அல்லது உண்மையோ மறைக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த அடிப்படையில் பாலிசி வழங்கப்பட்டது அல்லது புதுப்பிக்கப்பட்டது அல்லது ரைடர் வழங்கப்பட்டது எனில், :பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு பாலிசியை நிராகரிக்க முடிவெடுப்பதற்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். மேலும் வரம்புரையாக மோசடி என்ற அடிப்படையில் அல்லாமல் தவறான அறிக்கை அல்லது ஒரு முக்கிய உண்மையை மறைத்தல் என்ற அடிப்படையில் பாலிசி நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிராகரிக்கப்பட்ட தேதி வரைக்கும் பாலிசியில் வசூலிக்கப்பட்ட பிரீமியங்கள், பாலிசிதாரருக்கு அல்லது அவரின் சட்டபூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்
5) காப்பீட்டாளர் எந்த நேரத்திலும் வயதுச் சான்று கோருவதை இந்த பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது, மேலும் பாலிசிதாரரின் வயது முன்மொழிவில் தவறாகக் கூறப்பட்டுள்ளதால், ஆதாரத்தின் அடிப்படையில்.பாலிசியின் காலத்தில் திருத்தம் செய்யப்படுவதால், எந்தவொரு பாலிசியும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் கருதப்படாது.
ஃப்ரீ லுக் காலத்திற்குள் உங்கள் பாலிசியை நீங்கள் திருப்பித் தரலாம்;
ஏதேனும் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒருமுறை திரும்பப் பரிசீலிப்பதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் அந்த விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளில் எதையேனும் நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசியைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு பாலிசியை எங்களிடம் திருப்பி அனுப்பலாம். தொலைதூர மார்க்கெட்டிங் அல்லது எலக்ட்ரானிக் முறை மூலம் வாங்கிய பாலிசிகளுக்கான ஃப்ரீ லுக் காலம் 30 நாட்கள் ஆகும்.
உங்கள் பாலிசியை ரத்து செய்யும்போது உங்களுக்கு ஏதேனும் ரீஃபண்ட் கிடைக்குமா?
ஆம். பின்வருவனவற்றை கூட்டிக் கழித்து மீதித்தொகையை நாங்கள் திருப்பித் தருவோம்
செலுத்திய பிரீமிய்ம்
கழிக்க i. பாலிசி செயல்பாட்டில் இருந்த காலத்திற்கு புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் மற்றும் ரைடர் பிரீமியம் ஏதேனும் இருந்தால்
கழிக்க ii. செலுத்தப்பட்ட ஏதேனும் முத்திரை வரி
புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் என்பது காப்பீட்டுக் காலத்திற்கான விகிதாசார அடிப்படையிலான ரிஸ்க் பிரீமியம் ஆகும். தொலைதூர மார்க்கெட்டிங் என்பது பாலிசி வாங்கச்சொல்லி செய்யப்படும் ஒவ்வொரு கோரிக்கைகளும் (லீட் ஜெனரேஷன் உட்பட) மற்றும் பின்வரும் முறைகள் மூலம் காப்பீட்டு தயாரிப்புகளை விற்பனை செய்தல் ஆகியன அடங்கும்: (i) தொலைபேசி அழைப்பு; (ii) குறுஞ்செய்தி சேவை (SMS); (iii) மின்னஞ்சல், இணையம் மற்றும் இன்டராக்டிவ் டெலிவிஷன் (DTH) போன்ற எலக்ட்ரானிக் முறை; (iv) நேரடி அஞ்சல் மற்றும் செய்தித்தாள் & பத்திரிகை செய்திகள் போன்ற காகித முறை; மற்றும், (v) நேரில் செல்லாமல் வேறு எந்தவொரு வழியிலும் தயாரிப்பை வாங்கச்சொல்லி கோருதல்.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்