மோசடி, தவறான தகவல் அளித்தல் மற்றும் பறிமுதல் ஆகியவற்றிற்கு அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 இன் பிரிவின்படி தீர்க்கப்படும். மறுக்க முடியாத பிரிவு: அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 சொல்கிறது
1) பாலிசி தேதியிலிருந்து, அதாவது, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்கு உட்படுத்தப்படாது.
2) மோசடி காரணத்துக்காக பாலிசி தேதியிலிருந்து, அதாவது, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய முடிவுக்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
3)துணைப்பிரிவு (2) இல் என்ன குறிப்பிட்டிருந்தாலும் சரி, பாலிசிதாரர் ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது தனது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் தான் உண்மை என நம்பியதாக நிரூபிக்க முடிந்தால் அல்லது உண்மையை மறைப்பதற்கான வேண்டுமென்றே எந்த நோக்கமும் இல்லை என நிரூபிக்க முடிந்தால் அல்லது ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது காப்பீட்டாளருக்கு தெரிந்திருந்தால், எந்தவொரு காப்பீட்டாளரும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் பாலிசியை மோசடி காரணமாக நிராகரிக்க மாட்டார்,: மோசடி ஏற்பட்டால், பாலிசிதாரர் உயிருடன் இல்லை என்றால், அதை நிரூபிக்கும் பொறுப்பு பயனாளிகளுக்கு உள்ளது.
4) காப்பீடு செய்யப்பட்டவரின் ஆயுட்காலம் தொடர்பாக ஏதேனும் தவறான அறிக்கையோ அல்லது உண்மையோ மறைக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த அடிப்படையில் பாலிசி வழங்கப்பட்டது அல்லது புதுப்பிக்கப்பட்டது அல்லது ரைடர் வழங்கப்பட்டது எனில், :பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு பாலிசியை நிராகரிக்க முடிவெடுப்பதற்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். மேலும் வரம்புரையாக மோசடி என்ற அடிப்படையில் அல்லாமல் தவறான அறிக்கை அல்லது ஒரு முக்கிய உண்மையை மறைத்தல் என்ற அடிப்படையில் பாலிசி நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிராகரிக்கப்பட்ட தேதி வரைக்கும் பாலிசியில் வசூலிக்கப்பட்ட பிரீமியங்கள், பாலிசிதாரருக்கு அல்லது அவரின் சட்டபூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
5)காப்பீட்டாளர் எந்த நேரத்திலும் வயதுச் சான்று கோருவதை இந்த பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது, மேலும் பாலிசிதாரரின் வயது முன்மொழிவில் தவறாகக் கூறப்பட்டுள்ளதால், ஆதாரத்தின் அடிப்படையில்.பாலிசியின் காலத்தில் திருத்தம் செய்யப்படுவதால், எந்தவொரு பாலிசியும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் கருதப்படாது.