நுழைவு வயது (கடைசி பிறந்த நாளின் படி):
- Question
- நுழைவு வயது (கடைசி பிறந்த நாளின் படி):
- Answer
-
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 65 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
பாலிசி காலத்திற்கு சமம்
பாலிசியின் தொடக்கத்தில் ஒரு முறை செலுத்தல்
• குறைந்தபட்சம்: 5 ஆண்டுகள்
• அதிகபட்சம்: 40 ஆண்டுகள்
வருடாந்திரம், அரையாண்டு தோறும், மாதாந்திரம், சிங்கிள்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
IndiaFirst Life சரல் ஜீவன் பீமா பிளான் என்பது, ஒருநான்-லிங்க்டு, நான்-பார்டிஸிப்பேட்டிங், இண்டிவிஜுவல் பியூர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும், இது எதிர்பாராத நிகழ்வுகளின் போது உங்கள் குடும்பத்தின் நிதி நலனைப் பாதுகாக்கிறது. ஜீவன் சரல் பீமாவின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், உங்கள் அன்புக்குரியவர்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதன் மூலம் அவர்கள் ஒட்டுமொத்தப் பலனைப் பெறுவார்கள்.
விபத்தினால் ஏற்படும் இறப்பை தவிர, ரிஸ்க் தொடங்கிய நாளிலிருந்து 45 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ளது. காத்திருப்பு காலத்தின் போது, விபத்து காரணமாக ஆயுள் காப்பீட்டாளர் இறந்தால், குறிப்பிடப்பட்ட இறப்பு பலன் வழங்கப்படும்.
காத்திருப்பு காலத்தின் போது, விபத்து காரணமாக அல்லாமல் ஆயுள் காப்பீட்டாளர் இறந்து போனால், வரிகள் தவிர்த்து அனைத்து பிரீமியங்களின் 100% க்கு சமமான தொகை, இறப்பு பலனாக செலுத்தப்பட்டு பாலிசி முடிவடையும்.
i) காத்திருப்பு காலத்தின் போது ஆயுள் காப்பீட்டாளர் இறந்துவிட்டால், பாலிசி செயலில் இருந்தால், ஒட்டுமொத்தத் தொகையாக செலுத்தப்பட வேண்டிய இறப்புப் பலன் தொகையாவது:
(1) விபத்தினால் இறப்பு ஏற்பட்டால், வழக்கமான பிரீமியம் அல்லது லிமிடெட் பே (லிமிடெட் பே) பாலிசிக்கு, இவற்றுள் அதிகமானது இறப்புக்கான உத்தரவாத தொகைக்கு சமம்:
(அ) வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு, அல்லது
(ஆ) இறந்த தேதியின்படி செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களில் 105%, அல்லது
(c) பாலிசியின் தொடக்கத்தில் பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இறப்பின் போது செலுத்தப்படும் முழுமையான உத்தரவாத தொகை
(2) விபத்து இறப்பு ஏற்பட்டால், சிங்கிள் பிரீமியம் பாலிசிக்கு, இவற்றுள் அதிகமானது இறப்புக்கான உத்தரவாத தொகைக்கு சமம்:
(அ) சிங்கிள் பிரீமியத்தில் 125% அல்லது
(ஆ) பாலிசியின் தொடக்கத்தில் பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இறப்பின் போது செலுத்தப்படும் முழுமையான உத்தரவாத தொகை
(3) விபத்து அல்லாத பிற காரணங்களால் இறப்பு ஏற்பட்டால், இறப்புப் பலன் ஆனது, வரிகள் தவிர்த்து செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் 100% க்கு சமமாக இருக்கும்.
ii) காத்திருப்பு காலம் முடிவடைந்த பிறகு, முதிர்வு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பு, பாலிசி செயலில் இருக்கும் போது, ஆயுள் காப்பீடு பெற்றவரின் இறப்புக்கு, ஒட்டுமொத்தத் தொகையாக செலுத்தப்பட வேண்டிய இறப்புப் பலன் தொகையாவது:
(1) வழக்கமான பிரீமியம் அல்லது லிமிடெட் பே பாலிசிக்கு, "இறப்புக்கான உத்தரவாத தொகை" இவற்றுள் அதிகமானது:
(அ) வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு; அல்லது
(ஆ) இறந்த தேதியின்படி செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களில் 105%; அல்லது
(c) பாலிசியின் தொடக்கத்தில் பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இறப்பின் போது செலுத்தப்படும் முழுமையான உத்தரவாத தொகை
(2) சிங்கிள் பிரீமியம் பாலிசிக்கு, “இறப்புக்கான உத்தரவாத தொகை” இவற்றுள் அதிகமானது:
(அ) சிங்கிள் பிரீமியத்தில் 125% அல்லது
(ஆ) எழுத்துறுதி முடிவு மற்றும் ரைடர் பிரீமியம் (கள்) ஏதேனும் இருந்தால், அவற்றின் காரணமாக, பாலிசியின் கீழ் வசூலிக்கப்படும் கூடுதல் தொகை எதுவும், பாலிசியின் தொடக்கத்தில் பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறப்பின் போது செலுத்தப்படும் முழுமையான உத்தரவாத தொகையில் சேர்க்கப்படாது.
இறப்பின் போது வழங்கப்படும் முழுமையான உத்தரவாத தொகையானது அடிப்படை உத்தரவாதத் தொகைக்கு சமமான தொகையாக இருக்கும்.
இல்லை, இந்த பாலிசியில் லோன் அனுமதிக்கப்படாது
புதுப்பிப்பு காலம் ஆனது, செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது பாலிசி காலம் முடிவதற்கு முன்புரெகுலர்/ லிமிடெட் பே பாலிசிகளின் கீழ் எது முந்தையதோ அதுவரை இருக்கும்.
குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைப்படி தேவைப்பட்டால், செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் கெடு தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது பாலிசி காலம் முடியும் முன், இவற்றில் எது முதலில் வருகிறதோ, அதற்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உடல் தகுதி சான்றை வழங்கி, அனைத்து நிலுவை பிரீமியத்தையும் வட்டி இல்லாமல் செலுத்துவதன் மூலம் பாலிசியை புதுப்பிக்கலாம்.
குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கையின்படி புதுப்பிப்புக்கான அத்தகைய கோரிக்கைகளை மறுக்கும் உரிமை காப்பீட்டு நிறுவனத்திற்கு எப்போதும் இருக்கும். எழுத்துறுதி / மருத்துவச் செலவுகள் ஏதேனும் இருந்தால், அதை நீங்கள் ஏற்க வேண்டும்.
குறிப்பு: புதுப்பிப்பு வட்டி விகிதத்தை கணக்கிடுவதன் அடிப்படையில் செய்யப்படும் எந்த மாற்றமும் IRDAI இன் முன் ஒப்புதலுக்கு உட்பட்டது. பாலிசி புதுப்பிப்புக்கு காத்திருப்பு காலம் பொருந்தாது. பாலிசி புதுப்பிப்புக்கு காத்திருப்பு காலம் பொருந்தாது.
ஆம், ஃப்ரீ லுக் காலத்திற்குள் உங்கள் பாலிசியை நீங்கள் திரும்பக் கொடுக்கலாம்;
பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய, பாலிசி ஆவணம் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்கள் (எலக்ட்ரானிக் பாலிசிகள் மற்றும் தொலை பயன்முறைகள் மூலம் பெறப்பட்ட பாலிசிகளுக்கு 30 நாட்கள்) உங்களுக்கு (பாலிசிதாரர்) ஃப்ரீ லுக் காலமாக இருக்கும். உங்களுக்கு (பாலிசிதாரர்) அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், இந்த ஆட்சேபனைக்கான காரணங்களைக் கூறி, பாலிசியை ரத்துசெய்வதற்காக நிறுவனத்திடம் நீங்கள் திரும்ப கொடுக்கலாம். முன்மொழிபவரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்டாம்ப் டியூட்டி கட்டணங்கள் மூலம், நிறுவனத்துக்கு ஏற்படும் செலவுகள் மற்றும் காப்பீட்டுக் காலத்திற்கான விகிதாசார ரிஸ்க் பிரீமியத்தைக் கழித்துவிட்டு மட்டுமே செலுத்தப்பட்ட பிரீமியத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும்.
பாலிசியின் ஃப்ரீ லுக் ரத்துக்காக நிறுவனத்தால் பெறப்பட்ட கோரிக்கையானது, மேலே கூறப்பட்டுள்ளபடி, கோரிக்கை பெறப்பட்ட 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டு, பிரீமியம் திரும்ப செலுத்தப்படும்.
இந்தத் தொகையைச் செலுத்தியவுடன் இந்த பாலிசி முடிவடைந்து இந்த பாலிசியின் கீழ் உள்ள அனைத்து உரிமைகள், பலன்கள் மற்றும் விருப்பத்தேர்வுகள் நிறுத்தப்படும். தொலைதூர சந்தை, பின்வரும் முறைகள் மூலம் கோரிக்கை (லீட் ஜெனரேஷன் உட்பட) மற்றும் காப்பீட்டு தயாரிப்புகளின் விற்பனையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உள்ளடக்கியது: (i) குரல் முறை, இதில் தொலைபேசி அழைப்பு அடங்கும்; (ii) குறுகிய செய்தி சேவை (SMS); (iii) மின்னஞ்சல், இணையம் மற்றும் ஊடாடும் தொலைக்காட்சி (DTH) ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னணு முறை; (iv) நேரடி அஞ்சல் மற்றும் செய்தித்தாள் & மேகஸின் இதழ் செருகல்கள் உள்ளடக்கிய இயற்பியல் முறை; மற்றும், (v) நேரில் அல்லாமல் வேறு எந்த தகவல் தொடர்பு முறையிலும் கோரிக்கை.
ஆம், உங்கள் பாலிசியை ரத்து செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை உங்களுக்கு உள்ளது. பாலிசி ரத்து செய்யப்பட்டவுடன் பின்வரும் பலன்கள் செலுத்தப்படும்:
வழக்கமான பிரீமியம் | பாலிசி ரத்து மதிப்பு எதுவும் செலுத்தப்பட வேண்டியதில்லை |
---|---|
லிமிடெட் பே | லிமிடெட் பே பாலிசியின் கீழ், குறிப்பிட்ட முதிர்வுத் தேதிக்கு முன், அல்லது பாலிசி புதுப்பிக்கப்படாவிட்டால் புதுப்பிப்பு காலத்தின் முடிவில், குறைந்தது இரண்டு தொடர்ச்சியான முழு ஆண்டுகளுக்கான பிரீமியங்களைச் செலுத்தினால், பாலிசி ரத்து மதிப்பு பெறப்படும். இது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும். 70% X செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் ** X ((காலாவதியாகாத டெர்ம்) / (ஒரிஜினல் பாலிசி காலம்)) |
சிங்கிள் பிரீமியம் | சிங்கிள் பிரீமியம் செலுத்தப்பட்ட பிறகு (கூடுதல் பிரீமியம், ஏதேனும் இருந்தால் அவை உட்பட) மற்றும் குறிப்பிட்ட முதிர்வுத் தேதிக்கு முன், சிங்கிள் பிரீமியம் பாலிசிக்கு பாலிசி ரத்து மதிப்பு உடனடியாக பெறப்படும். இது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும். 70% X செலுத்தப்பட்ட சிங்கிள் பிரீமியம் X ((காலாவதியாகாத டெர்ம்) / (ஒரிஜினல் பாலிசி காலம்)) |
** பாலிசி ரத்து மதிப்பைக் கணக்கிடுவதற்கு, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் கூடுதல் பிரீமியங்கள் ஏதேனும் இருந்தால் அவை உள்ளடங்கும்.
சிங்கிள் பிரீமியம் என்பது கூடுதல் பிரீமியம் ஏதேனும் இருந்தால் அவற்றை உள்ளடக்கியதாகும்
முற்றிலும் இது ஒரு பாதுகாப்பு பாலிசி என்பதால் இந்தக் பாலிசியில் முதிர்வுப் பலன் எதுவும் செலுத்தப்படாது.
நிலவும் வருமான வரி# சட்டங்களின்படி செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறத்தக்க பலன்களில் வரி# பலன்கள் கிடைக்கலாம். அரசாங்க வரிச் சட்டங்களின் படி இவை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டது. இந்த பாலிசியை வாங்குவதற்கு முன், உங்கள் வரி# ஆலோசகரை ஆலோசிக்கவும்.
வழக்கமான பிரீமியம் மற்றும் லிமிடெட் பே பாலிசிகளில், இந்தக் பாலிசியை பொறுத்தமட்டில், முதல் இரண்டு தொடர்ச்சியான முழு ஆண்டுகளுக்கான பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், மற்றும் அதற்குப் பிறகு ஏதேனும் பிரீமியம் முறையாகச் செலுத்தப்படாவிட்டால், செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து கருணை காலம் முடிவடைந்த பிறகு அனைத்து பலன்களும் நிறுத்தப்படும், எதுவும் செலுத்தப்படாது, அதுவரை ஏதேனும் பிரிமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால் அவையும் திரும்ப செலுத்தப்படாது. இரண்டு தொடர்ச்சியான முழு ஆண்டு பிரீமியங்களைச் செலுத்திய பிறகு, பிரிவு 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாலிசி ரத்து மதிப்பு செலுத்தப்டும்.
வழக்கமான மற்றும் லிமிடெட் பே பாலிசிகளுக்கு மட்டுமே நாங்கள் உங்களுக்கு கருணை காலத்தை வழங்குகிறோம். கருணை காலமானது பிரீமியம் செலுத்தும் முறை வருடாந்திரம் அல்லது அரையாண்டு எனில் 30 நாட்கள் மற்றும் மாதாந்திரம் எனில் 15 நாட்கள், ஒவ்வொரு புதுப்பிக்கும் பிரிமியத்துக்கும் அனுமதிக்கப்படுகிறது. கருணை காலம் முடிவதற்குள் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், பாலிசி முடிந்துவிடும்.
ஆயுள் காப்பீடு பெற்றவரின் இறப்பு கருணை காலத்திற்குள் நிகழ்ந்தாலும், அப்போது செலுத்த வேண்டிய பிரீமியத்தைச் செலுத்துவதற்கு முன்பு நிகழ்ந்தாலும், பாலிசி இன்னும் செல்லுபடியாகும், மேலும் அந்தச் செலுத்தப்படாத பிரீமியம் மற்றும் இறந்த தேதியிலிருந்து அடுத்த பாலிசி ஆண்டுக்கு முன் மீதமுள்ள பிரீமியம் ஏதேனும் இருந்தால், அவற்றை கழித்து பலன்கள் செலுத்தப்படும்.
இந்த கருணை காலத்தில் உங்களின் அனைத்து பாலிசி பலன்களும் தொடரும், மேலும் பாலிசி செயலில் உள்ளதாக கருதப்படும்.
a) ரெகுலர்/லிமிடெட் பே பாலிசிகளுக்கு:
ஜீவன் சரல் பீமாவின் கீழ், ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர், ரிஸ்க் அல்லது புதுப்பிப்பு தேதி தொடங்கிய 12 மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டால், பாலிசி செயலில் இருந்தால், அது செல்லாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியங்களில் (எழுத்துறுதி முடிவுகள், வரிகள் மற்றும் ரைடர் பிரீமியங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றின் காரணமாக ஏற்படும் கூடுதல் கட்டணங்கள் தவிர்த்து) 80% பணத்தைத் திரும்பப் பெறுவதைத் தவிர, நிறுவனம் எந்த ஒரு கோரிக்கையையும் செயல்படுத்தாது . பேஅவுட் கள் எதுவும் இல்லாததால் முடிந்து போன பாலிசிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
b) சிங்கிள் பிரீமியம் பாலிசிகளுக்கு:
ஆபத்தின் தொடக்கத்திலிருந்து 12 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீடு பெற்றவர் தற்கொலை செய்து கொண்டால், இந்த ஜீவன் பீமா பாலிசி செல்லாது. இது போன்ற சந்தர்ப்பங்களில், எழுத்துறுதி முடிவுகள் மற்றும் ரைடர் பிரீமியங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றின் காரணமாக உள்ள கூடுதல் கட்டணங்கள் தவிர்த்து, செலுத்தப்பட்ட சிங்கிள் பிரீமியத்தில் 90% பணத்தைத் திரும்பப் பெறுவதைத் தவிர, நிறுவனம் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்காது.
உங்களின் உடனடி குறிப்புக்காக, 25 வருட பாலிசி காலம் மற்றும் INR 10,00,000 உத்தரவாத தொகைக்கான சில மாதிரி வருடாந்திர பிரீமியம் தொகைகளை (ரெகுலர் பிரீமியம்) கீழே வழங்கியுள்ளோம் -
வயது/ பாலிசி டெர்ம் | வருடாந்திர பிரீமியம் |
---|---|
25 | 3,160 |
30 | 4,040 |
35 | 5,750 |
40 | 8,460 |
45 | 12,620 |
அவ்வப்போது திருத்தப்படும், காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 இன் விதிகளின்படி, மோசடி/தவறான அறிக்கைகள் கையாளப்படும்.
அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 கூறுவது,
1) பாலிசியின் தேதியிலிருந்து, அதாவது பாலிசி வழங்கிய தேதி அல்லது ரிஸ்க் தொடங்கும் தேதி அல்லது புதுப்பிப்பு தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி, இவற்றுள் கடைசியானதில் இருந்து மூன்று வருடங்கள் முடிந்த பிறகு எந்த காரணத்திற்காகவும் ஆயுள் காப்பீடு கேள்விக்குள்ளாக்கப்படாது.
2) பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ரிஸ்க் தொடங்கும் தேதி அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி, ஆகியவற்றுள் பிந்தைய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீட்டு பாலிசி மோசடியின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்க படலாம்: காப்பீடு பெற்றவர் அல்லது சட்டப்பூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிக்கள் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு எழுத்துப்பூர்வமாக அத்தகைய தீர்மானம் அடிப்படையாகக் கொண்டுள்ள காரணங்கள் மற்றும் பொருட்களை காப்பீட்டாளர் தெரிவிக்க வேண்டும்.
3) துணைப்பிரிவு (2) இல் உள்ள எதுவும் இருந்தபோதிலும், எந்தவொரு காப்பீடு நிறுவனமும் மோசடியின் அடிப்படையில், பொய்யான அறிக்கை அல்லது உண்மையை மறைத்தல் ஆகியவற்றை காப்பீடு செய்யப்பட்டவரின் அறிவு மற்றும் நம்பிக்கைக்கு எட்டியவரை சரியானது என்றும் அல்லது உண்மையை வேண்டுமென்றே மறைக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லை அல்லது ஒரு தகவலை தவறாக கூறும் எண்ணம் இல்லை என்றும் காப்பீடு செய்யப்பட்டவர் நிரூபித்தால் ஆயுள் காப்பீட்டு பாலிசியை நிராகரிக்கக்கூடாது. மோசடி நடந்தால், பாலிசிதாரர் உயிருடன் இல்லை என்றால், அதை நிராகரிக்கும் பொறுப்பு பயனாளிகள் மீது உள்ளது.
4) பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ரிஸ்க் தொடங்கும் தேதி அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி அல்லது பாலிசிக்கு ரைடர் செய்த தேதி இவற்றுள் கடைசியாக உள்ள தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும், முன்மொழிவு அல்லது பிற ஆவணத்தில் தவறாக கூறப்பட்டுள்ள காப்பீடு பெற்றவரின் ஆயுட்காலம் குறித்த உண்மைத் தகவலைப் பற்றிய எந்தவொரு அறிக்கையின் அடிப்படையிலும் அல்லது அவை மறைத்தலின் அடிப்படையிலும், பாலிசி வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட அல்லது ரைடர் வழங்கப்பட்டதன் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டு பாலிசி கேள்விக்குட்படுத்த படலாம்:
காப்பீட்டாளர் அல்லது சட்டப்பூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிக்கள் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு எழுத்துப்பூர்வமாக அத்தகைய தீர்மானம் அடிப்படையாகக் கொண்டுள்ள காரணங்கள் மற்றும் பொருட்களை காப்பீட்டாளர் தெரிவிக்க வேண்டும்: மோசடியின் அடிப்படையில் அல்லாமல், தவறான அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இருந்தால், நிராகரிப்பு தேதி வரை பாலிசியில் வசூலிக்கப்படும் பிரீமியங்கள், காப்பீட்டாளர் அல்லது சட்டப் பிரதிநிதிகள் அல்லது நாமினிக்கள் அல்லது நியமிக்கப்பட்டவர்களுக்கு, அத்தகைய மறுப்புத் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் செலுத்தப்படும்.
5) காப்பீடு செய்தவர் வயதுச் சான்றிதழை வழங்க வேண்டியிருந்தால் இந்த பிரிவில் உள்ள எதுவும் எந்த நேரத்திலும் அதை தடுக்காது, மேலும் ஆயுள் காப்பீடு பெற்றவரின் வயது, முன்மொழிவில் தவறாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் பாலிசியின் விதிமுறைகள் சரி செய்யப்படுவதால் மட்டுமே எந்த பாலிசியும் கேள்விக்குரியதாக கருதப்படாது.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.
உத்திரவாதமான பலன்கள், குறைந்த கட்டண விதிமுறைகள், ஆயுள் காப்பீடு மற்றும் கூடுதல் பலன்கள் உடன் உங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பிற்கான விரிவான சேமிப்புத் திட்டம்.
அனைத்தையும் பார்க்கவும்
Disclaimer
#Tax benefits may be available on the premiums paid and benefits received as per prevailing tax laws.