முதிர்வின் போது காப்பீட்டாளரின் வயது
- Answer
-
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 70 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
டெர்ம் காலம்: வழக்கமான பிரீமியமுக்கு 15 - 25 ஆண்டுகள்
வருடாந்திரம், அரையாண்டு மற்றும் மாதாந்திரம்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
பாலிசி காலத்தின் முடிவில், உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஆரம்பத் தொகை மற்றும் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு வழங்க முடிவு செய்யும் ஏதேனும் போனஸ்கள் உள்ளிட்ட உத்தரவாதமளிக்கப்பட்டத் தொகையை நீங்கள் பெறுவீர்கள். இந்த போனஸ் ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடும்.
நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறக்கூடிய பலன்கள் மீது வரிச் சலுகைகள் கிடைக்கலாம். அரசாங்க வரிச் சட்டங்களின்படி இவை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. இந்த பாலிசியை வாங்குவதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரை கலந்தாலோசியுங்கள்.
ஆம். உங்கள் பாலிசியை சரண்டர் செய்ய நாங்கள் உங்களை ஊக்குவிக்கவில்லை என்றாலும், அவசர காலங்களில் உடனடி பணத் தேவைக்காக அதை நீங்கள் சரண்டர் செய்யலாம். இரண்டு முழு ஆண்டுகளுக்கான பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால் எந்த நேரத்திலும் உங்கள் பாலிசியை நீங்கள் சரண்டர் செய்யலாம்.
கேரண்டீட் சரண்டர் வேல்யூ (GSV) மற்றும் ஸ்பெஷல் சரண்டர் வேல்யூ (SSV) ஆகிய இவ்விரண்டில் அதிகமானது எதுவோ அதையே சரண்டர் செய்யும்போது செலுத்த வேண்டும். GSV காரணிகள் பாலிசியை சரண்டர் செய்த ஆண்டு மற்றும் பாலிசி காலத்தைப் பொறுத்ததாகும்.
ரைடர் பிரீமியம் ஏதேனும் இருந்தால் நீங்கலாக செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் மற்றும் இணைப்பு A இல் குறிப்பிட்டுள்ளபடி போனஸ், அறிவிக்கப்பட்டால், சரண்டர் தேதி வரை சேர்ந்துள்ள சப்சிஸ்டிங் போனஸ் ஆகியவற்றிற்கு GSV காரணிகள் பொருந்தும்
SSV என்பது
செலுத்தப்பட்ட மதிப்பு X சரண்டர் செய்யும்போது SSV காரணி. இந்த SSV காரணி அவ்வப்போது எங்களால் தீர்மானிக்கப்படும்.
ஃப்ரீலுக் காலத்துக்குள் நீங்கள் பாலிசியை திருப்பித் தரலாம், ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாதபட்சத்தில், தொலைதூர மார்க்கெட்டிங் அல்லது எலக்ட்ரானிக் மோட் எனில் பாலிசி ஆவணம் கிடைத்ததிலிருந்து 30 நாட்களுக்குள்ளும், மற்றபிற அனைத்து சேனல்களுக்கும் பாலிசி ஆவணம் கிடைத்ததிலிருந்து 15 நாட்களுக்குள்ளும் திருப்பித் தருவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு நீங்கள் பாலிசியை நிறுவனத்திடம் திருப்பித் தரலாம்.
உங்கள் பாலிசியை திருப்பித்தரும்போது உங்களுக்கு ஏதேனும் ரீஃபண்ட் கிடைக்குமா?
ஆம். நீங்கள் செலுத்திய பிரீமியத்திலிருந்து பின்வருவனவற்றை கழித்து மீதித்தொகையை நாங்கள் திருப்பித் தருவோம்
கழிக்க i. பாலிசி செயல்பாட்டில் இருந்த காலத்துக்கான புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் மற்றும் ரைடர் பிரீமியம்
கழிக்க ii. செலுத்தப்பட்ட ஏதேனும் முத்திரை வரி
கழிக்க iii. மருத்துவ பரிசோதனைக்கு ஏதேனும் செலவுகள் செய்யப்பட்டிருந்தால் அத்தொகை. தொலைதூர மார்க்கெட்டிங் என்பது பாலிசி வாங்கச்சொல்லி செய்யப்படும் ஒவ்வொரு கோரிக்கைகளும் (லீட் ஜெனரேஷன் உட்பட) மற்றும் பின்வரும் முறைகள் மூலம் காப்பீட்டு தயாரிப்புகளை விற்பனை செய்தல் ஆகியன அடங்கும்: (i) தொலைபேசி அழைப்பு; (ii) குறுஞ்செய்தி சேவை (SMS); (iii) மின்னஞ்சல், இணையம் மற்றும் இன்டராக்டிவ் டெலிவிஷன் (DTH) போன்ற எலக்ட்ரானிக் முறை; (iv) நேரடி அஞ்சல் மற்றும் செய்தித்தாள் & பத்திரிகை செய்திகள் போன்ற காகித முறை; மற்றும், (v) நேரில் செல்லாமல் வேறு எந்தவொரு வழியிலும் தயாரிப்பை வாங்கச்சொல்லி கோருதல்.
ஆம், இந்த பாலிசியின் கீழ் நீங்கள் கடன் பெற்று பயனடையலாம்.
எந்த நேரத்திலும் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை சரண்டர் மதிப்பைப் பொறுத்ததாகும். இருக்கின்ற சரண்டர் மதிப்பில் 90% வரை கடன் தொகையை நீங்கள் பெறலாம். குறைந்தபட்ச கடன் தொகை ரூ.1,000 ஆக இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள கடனும் வட்டியும் பணம் செலுத்தப்பட்ட பாலிசிகளின் சரண்டர் மதிப்பை அல்லது செலுத்தப்பட்ட மதிப்பை தாண்டும்போது, பாலிசி கட்டாயமாக சரண்டர் செய்யப்படும். பிரீமியம் செலுத்தும் பாலிசிகளுக்கு கட்டாய சரண்டர் பொருந்தாது. நிலுவையில் உள்ள கடனும் வட்டியும் சரண்டர் தொகையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு பாலிசி நிறுத்தப்படும். ஆயுள் காப்பீட்டுதாரர் எதிர்பாராமல் இறக்க நேர்ந்தால், பணம் வழங்குவதற்கு முன்னர் நிலுவையிலுள்ள அசலும் வட்டியும் முதிர்வுத்தொகை அல்லது சரண்டர் மதிப்பிலிருந்து கழித்து மீதத்தொகையே வழங்கப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் கடனுக்கு ஆண்டுக்கு 10% வட்டி வசூலிக்கிறோம். கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் IRDAI இன் முன் ஒப்புதலுக்கு உட்பட்டது.
மோசடி, தவறான அறிக்கை ஆகியவற்றிற்கு அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன், பிரிவு 45 இன்படி தீர்க்கப்படும், அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன், பிரிவு 45 சொல்கிறது
1) பாலிசி தேதியிலிருந்து, அதாவது, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்கு உட்படுத்தப்படாது
2) மோசடி காரணத்துக்காக பாலிசி தேதியிலிருந்து, அதாவது, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய முடிவுக்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
3) துணைப்பிரிவு (2) இல் என்ன குறிப்பிட்டிருந்தாலும் சரி, பாலிசிதாரர் ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது தனது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் தான் உண்மை என நம்பியதாக நிரூபிக்க முடிந்தால் அல்லது உண்மையை மறைப்பதற்கான வேண்டுமென்றே எந்த நோக்கமும் இல்லை என நிரூபிக்க முடிந்தால் அல்லது ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது காப்பீட்டாளருக்கு தெரிந்திருந்தால், எந்தவொரு காப்பீட்டாளரும் ஒரு ஆயுள் காப்பீட்டுப் பாலிசியை மோசடி காரணமாக நிராகரிக்க மாட்டார்,: மோசடி செய்யப்பட்டிருந்தால் மற்றும் பாலிசிதாரர் உயிருடன் இல்லை என்றால், அதை நிரூபிக்கும் பொறுப்பு பயனாளிகளுக்கு உள்ளது.
4) காப்பீடு செய்யப்பட்டவரின் ஆயுட்காலம் தொடர்பாக ஏதேனும் தவறான அறிக்கையோ அல்லது உண்மையோ மறைக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த அடிப்படையில் பாலிசி வழங்கப்பட்டது அல்லது புதுப்பிக்கப்பட்டது அல்லது ரைடர் வழங்கப்பட்டது எனில், :பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு பாலிசியை நிராகரிக்க முடிவெடுப்பதற்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். மேலும் வரம்புரையாக மோசடி என்ற அடிப்படையில் அல்லாமல் தவறான அறிக்கை அல்லது ஒரு முக்கிய உண்மையை மறைத்தல் என்ற அடிப்படையில் பாலிசி நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிராகரிக்கப்பட்ட தேதி வரைக்கும் பாலிசியில் வசூலிக்கப்பட்ட பிரீமியங்கள், பாலிசிதாரருக்கு அல்லது அவரின் சட்டபூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய முடிவுக்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.ஒரு பொருள் உண்மையை தவறாக மதிப்பிடுதல் அல்லது அடக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசியை நிராகரித்தால், மோசடியின் அடிப்படையில் அல்ல, பாலிசியில் சேகரிக்கப்பட்ட பிரீமியங்கள் நிராகரிக்கப்பட்ட தேதி வரை காப்பீட்டாளர் அல்லது சட்ட பிரதிநிதிகள் அல்லது காப்பீட்டாளரின் நியமனதாரர்கள் அல்லது ஒதுக்கீட்டாளர்களுக்கு அத்தகைய நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் செலுத்தப்படும்.
5) காப்பீட்டாளர் எந்த நேரத்திலும் வயதுச் சான்று கோருவதை இந்த பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது, மேலும் பாலிசிதாரரின் வயது முன்மொழிவில் தவறாகக் கூறப்பட்டுள்ளதால், அதற்கடுத்து வழங்கப்படும் ஆதாரத்தின் அடிப்படையில்.பாலிசியின் காலத்தில் திருத்தம் செய்யப்படுவதால், எந்தவொரு பாலிசியும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் கருதப்படாது.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் சிம்பிள் பெனிஃபிட் பிளான் என்பது ஒரு நான்-லிங்க்ட் என்டௌமென்ட் இன்சூரன்ஸ் திட்டமாகும், இது பாதுகாப்பையும் பாதுகாப்பான கருவிகள் மூலம் எதிர்காலத்திற்காக சேமிப்பதற்கான வழிமுறையையும் வழங்குகிறது. உங்கள் வழக்கமான பிரீமியத்தை தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் உங்களுக்கு உள்ளது, இது உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்கிறது. உங்கள் வயது, பாலிசி காலம் மற்றும் ஆயிரம் ரூபாய் பிரீமியத்துக்கு போன்ற காரணிகளின் அடிப்படையில் உங்கள் காப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படுகிறது, இது உங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட பேஅவுட்டை வழங்குகிறது.
எதிர்பாராத வகையில் இறப்பு ஏற்பட்டால் பணப்புழக்க சிக்கல்களைத் தவிர்க்க இந்தத் தொகை உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இந்தத் திட்டம் வருமான வரி சேமிப்பு திட்டங்களுக்கு தகுதி பெறுகிறது மற்றும் மதிப்புமிக்க சேமிப்பு திட்ட காப்பீடாக செயல்படுகிறது, இது உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மன நிம்மதி மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குகிறது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து உங்கள் தேவைகளின் அடிப்படையில் ஆயுள் காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், இறப்பு பலனானது பாலிசி காலத்தின் எந்த நேரத்திலும் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் 105% க்கு குறைவாக இருக்கக்கூடாது.
காப்பீட்டுத் தொகை | வரம்பு |
---|---|
குறைந்தபட்சம் | Rs 20,000 |
அதிகபட்சம் | Rs 5,00,000 |
எங்களால் வழங்கப்பட்ட அனைத்து தனித்தனி பாலிசிகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை அனைத்தையும் கூட்டினால் ரூ. 2,00,000 க்கு மேல் இருந்தால், புகைபிடிப்பவர் மற்றும் புகைபிடிக்காதவர் தனித்தனியாக எழுத்துறுதி விதிமுறைகளின்படி நடத்தப்படுவார்கள். ஆயுள் காப்பீட்டாளரின் வயது, பாலினம், பாலிசி காலம் மற்றும் செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை ஆகியவற்றைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை மாறுபடும். இதனை கீழ்க்கண்ட அட்டவணையில் இருந்து அறியலாம்.
வயது/பிரீமியம் தொகை | Rs 5000 p.a. | Rs 10000 p.a. | Rs 20000 p.a. |
---|---|---|---|
25 years | 86,045 | 1,72,090 | 3,44,180 |
30 years | 85,690 | 1,71,380 | 3,42,760 |
35 years | 84,920 | 1,69,840 | 3,39,680 |
40 years | 83,390 | 1,66,780 | 3,33,560 |
45 years | 80,840 | 1,61,680 | 3,23,360 |
50 years | 77,305 | 1,54,610 | 3,09,220 |
உதாரணம்:
ஆயுள் காப்பீட்டுதாரரின் வயது: 35 (ஆண்) பாலிசி காலம்: 15 ஆண்டுகள் பிரீமியம் தொகை: ' ஆண்டுக்கு 10,000 எனவே ஆயுள் காப்பீட்டுதாரர் பின்வருவனவற்றிற்கு தகுதி பெறுகிறார் –
இது ஒரு வழக்கமான பிரீமியம் பாலிசி ஆகும், இதில் 15 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பாலிசி காலத்தை தேர்வு செய்யலாம்.
இந்த பாலிசியில் ‘ஆயுள் காப்பீட்டுதார்ர்', ‘பாலிசிதாரர்’, 'நாமினி' மற்றும் “நியமனதாரர்” ஆகியோர் அடங்குவர்.
ஆயுள் காப்பீட்டுதாரர் என்பவர் யார்'?
பாலிசியில் யாருடைய ஆயுளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோ அவரே ஆயுள் காப்பீட்டுதாரர் ஆவார். பாலிசி தொடங்கும் தேதியிலிருந்தே இறப்புப் பலன்கள் உடனடியாக தொடங்குகின்றன. ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பின் போது, இந்த பலன் வழங்கப்பட்டு பாலிசி முடிவடைகிறது. இந்தியக் குடிமகன் எவரும் ஒரு ஆயுள் காப்பீட்டுதாரராக இருப்பதற்கு பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
பாலிசிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் குறைந்தபட்ச வயது | பாலிசிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் அதிகபட்ச வயது | பாலிசி காலம் முடிவில் அதிகபட்ச வயது |
---|---|---|
Mபாலிசி காலம் முடிவில் அதிகபட்ச வயது | கடைசி பிறந்த நாளின்படி 50 வயது | கடைசி பிறந்த நாளின்படி 70 வயது |
பாலிசிதாரர் என்பவர் யார்?
பாலிசிதாரர் என்பவர் பாலிசியை வைத்திருப்பவராவார். பாலிசிதாரர் ஆயுள் காப்பீட்டுதாரராகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பாலிசிதாரராக இருப்பதற்கு, பாலிசிக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் உங்கள் கடைசி பிறந்தநாளின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
நாமினி(கள்) என்பவர் யார்?
நாமினி(கள்) என்பவர் ஆயுள் காப்பீட்டுதாரரின் எதிர்பாராத இறப்பின்போது இறப்புப் பலங்களைப் பெறும் நபர்(கள்) ஆவார். பாலிசிதாரரான உங்களால் நியமிக்கப்படுபவர் (கள்)தான்.இந்த நாமினி(கள்), இவர்கள் மைனராக கூட இருக்கலாம் (அதாவது 18 வயதுக்கு குறைவானவர்கள்).
நியமனதாரர் என்பவர் யார்?
உங்கள் நாமினி(கள்) மைனராக இருந்தால், பாலிசிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நீங்கள் பரிந்துரைக்கக்கூடிய நபர்தான் நியமனதாரர். நீங்கள் இல்லாத சமயத்தில் நியமனதாரர் பாலிசி சம்பந்தப்பட்டவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
சலுகைக்கு தடை: அவ்வப்போது திருத்தப்பட்ட காப்பீட்டு சட்டம், 1938 பிரிவு 41 சொல்கிறது,
1) இந்தியாவில் ஆயுள் அல்லது சொத்து தொடர்பான எந்த வகையான ஆபத்துகள் தொடர்பாகவும் காப்பீட்டை எடுக்க அல்லது புதுப்பிக்க அல்லது தொடர எந்தவொரு நபருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தூண்டுதலாக, செலுத்த வேண்டிய கமிஷன் முழுவதிலும் அல்லது பகுதியளவில் ஏதேனும் சலுகை அல்லது பாலிசியில் காட்டப்பட்டுள்ள பிரீமியத்தில் ஏதேனும் சலுகை ஆகியவற்றை எந்தவொரு நபரும் அனுமதிக்கவோ அல்லது அனுமதிக்க செய்யவோ கூடாது. அத்தகைய சலுகைகள் காப்பீட்டாளரின் வெளியிடப்பட்ட தகவலறிக்கை அல்லது அட்டவணைகளின்படி மட்டுமே அனுமதிக்கப்படும்
2) இந்த பிரிவின் விதிமுறைக்கு இணங்கத் தவறும் எந்தவொரு நபருக்கு பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
பிரீமியம் செலுத்தும் முறை | Minimum Premium | Maximum Premium |
---|---|---|
மாதாந்திரம் | Rs174 | Rs 2,814 |
அரையாண்டு | Rs 1,024 | Rs 16,555 |
ஆண்டுதோறும் | Rs 2,000 | Rs 32,340 |
தவணை பிரீமியம் பெறுவதற்கான வருடாந்திர பிரீமியம் மீது மாதாந்திர மற்றும் அரையாண்டு பாலிசிகளுக்கான பின்வரும் பிரீமியம் கால இடைவெளிகள் காரணிகள் பொருந்தும்.
பிரீமியம் கால இடைவெளிகள் | வருடாந்திர பிரீமியத்திற்கு பயன்படுத்த வேண்டிய காரணி |
---|---|
மாதாந்திரம் | 0.0870 |
அரையாண்டு | 0.5119 |
நாங்கள் உங்களுக்கு ஒரு கருணைக் காலத்தை வழங்குகிறோம், இது பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து பிரீமியம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம், இந்த நேரத்தில் பாலிசி இடர் காப்பீட்டுடன் செயல்பாட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது மாதாந்திர அடிப்படையில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 15 நாட்களும் மற்றும் பிற முறையில் அதாவது வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு இடைவெளிகளில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் 30 நாட்களுக்குக் குறையாமலும் கருணைக் காலத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கருணைக் காலத்தில் ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு ஏற்பட்டால், இறப்பு தேதி தேதி வரை செலுத்தப்படாத பிரீமியங்களைக் கழித்த பிறகு மீதமுள்ள பலன்களை நாமினி(கள்)/ நியமனதாரர்(கள்) / சட்டப்பூர்வ வாரிசு(களுக்கு) நாங்கள் வழங்குவோம்.
நீங்கள் உங்கள் பிரீமியத்தை மாதாந்தோறும், அரையாண்டுதோறும் அல்லது வருடாந்திரமாக செலுத்தலாம்.
இரண்டு பாலிசி ஆண்டுகளுக்குள்
முதல் இரண்டு பாலிசி ஆண்டுகளில் பிரீமியம் செலுத்துவதை நீங்கள் நிறுத்திவிட்டால், பாலிசி எந்த மதிப்பும் பெறாது.
நாங்கள் ஐந்து வருட புதுப்பிப்பு காலத்தை வழங்குகிறோம், இந்தக் காலத்தில் நீங்கள் உங்கள் பாலிசியை புதுப்பிக்கலாம். இந்த காலகட்டத்தில் எந்த பலன்களும் வழங்கப்பட மாட்டாது.
இரண்டு பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு
இரண்டு முழு பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பிரீமியங்களை செலுத்துவதை நீங்கள் நிறுத்தினால், பாலிசி உத்தரவாதமளிக்கப்பட்ட செலுத்தப்பட்ட மதிப்பைப் பெறுகிறது. செலுத்தப்பட்ட மதிப்பு என்பது விகிதாசார காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் அறிவித்திருந்தால் சேர்ந்திருக்கும் போனஸ் ஆகும். முதிர்வுத் தேதியில் அல்லது முதிர்வுத் தேதிக்கு முன்னர் ஆயுள் காப்பீட்டுதாரர் இறந்துவிட்டால் அத்தேதியில் பாலிசியின் செலுத்தப்பட்ட மதிப்பை நாங்கள் வழங்குவோம். பாலிசி செலுத்தப்பட்ட மதிப்பை பெற்றவுடன் இனி இலாபத்தில் பங்கேற்காது.
விகிதாசார அடிப்படை காப்பீட்டுத் தொகை என்பது (காப்பீட்டுத் தொகை X செலுத்தப்பட்ட பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை) / செலுத்த வேண்டிய பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை
பாலிசியை புதுப்பிக்க உங்களுக்கு கிடைக்கின்ற விருப்பங்கள் என்ன?
கீழ்கண்டவாறு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம் –
ஆயுள் காப்பீட்டுதாரரின் எதிர்பாராத இறப்பு நேரிடும் பட்சத்தில், கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மொத்த தொகையானது, நாமினி(கள்)/நியமநதாரர்(கள்) / சட்டப்பூர்வ வாரிசு(கள்) ஆகியோருக்கு வழங்கப்படும்.
பாலிசி செயல்பாட்டில் இருக்கும் பட்சத்தில் இறப்புப் பலன் | இவற்றில் அதிகமானது எதுவோ அத்தொகை (உத்தரவாதமளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை அல்லது 10 மடங்கு வருடாந்திர பிரீமியம்) + அறிவித்திருந்தால், இறக்கும் வரை சேர்ந்துள்ள போனஸ் |
---|
எந்த நேரத்திலும் வழங்க வேண்டிய இறப்புப் பலன் செலுத்த வேண்டிய மொத்த பிரீமியங்களில் 105% க்கும் குறைவாக இருக்கக்கூடாது.
பாலிசியின் கீழ் ஆபத்து தொடங்கிய நாளிலிருந்து அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் தற்கொலை காரணமாக இறப்பு ஏற்பட்டால், பாலிசி செயல்பாட்டில் இருந்தால், பாலிசிதாரரின் நாமினி அல்லது பயனாளி இறந்த தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் 80% அல்லது இறப்பு தேதியின்படி கிடைக்கக்கூடிய சரண்டர் மதிப்பு ஆக இதில் எது அதிகமோ அத்தொகையைப் பெற தகுதி பெறுகிறார்.
15 அல்லது 20 ஆண்டுகள் முழு பாலிசி காலத்தின் போது, இலகுவான பிரீமியங்கள், உத்தரவாதமான உயிர்வாழும் பலன்கள் மற்றும் ரொக்க போனஸ் (அறிவிக்கப்பட்டால்) ஆயுள் காப்பீட்டுக் காப்பீடு ஆகியவற்றை வழங்கும் இந்த உத்தரவாத சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன் தனிப்பயனாக்கப்பட்ட பயணத்தைத் தொடங்குங்கள்.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்